தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

காதலுக்காக நாட்டையும் மதத்தையும் துறந்த இளம்பெண் பேட்டி!

19 வயதான கிறுத்துவ பெண் ஒருவர், அபுதாபிக்கு தப்பிச் சென்று இஸ்லாம் மதத்திற்கு மாறினார்

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:15 am

ENS

19 வயதான கிறுத்துவ பெண் ஒருவர், அபுதாபிக்கு தப்பிச் சென்று இஸ்லாம் மதத்திற்கு மாறினார் என்ற செய்தி அண்மையில் ஊடகங்களில் பரவியது. கல்லூரிக்குச் சென்ற மகள் வீடு திரும்பவில்லை என்று அவரது பெற்றோர்கள் தில்லி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். சியானியின் கல்லூரி தோழர்கள் சியானி காணாமல் போனதை ஒட்டி தலைமை நீதிபதியிடம் மனு அளித்தனர். அதில் உலகு எங்கிலும் பேரழிவை உருவாக்கும் சக்திகளால் ஒரு இந்திய குடிமகள் கடத்தப்பட்டுள்ளார்’என்று குறிப்பிட்டிருந்தனர்.

தன்னுடைய காதலுக்காக சொந்த விருப்பத்தின் பேரில்தான் இந்தியாவை விட்டு வெளியேறியதாகவும், ஒரு பயங்கரவாத குழுவில் சேர வற்புறுத்தப்பட்டு கடத்தப்பட்டதாக வெளிவந்த ஊடகச் செய்திகளைக் நம்ப வேண்டாம் என்று கூறினார். 

தற்போது ஆயிஷா என்று அழைக்கப்படும் சியானி ஞாயிற்றுக்கிழமை துபாய் டெய்லி பத்திரிகை பேட்டியில் கூறியது: 'இத உண்மையல்ல. உண்மையான காதலை நான் கண்டு கொண்டேன், எனது சொந்த விருப்பத்தின் பேரில்தான் அபுதாபிக்கு வந்துள்ளேன். என்னை மதம் மாற யாரும் வற்புறுத்தவில்லை, என் சுய விருப்பத்தினால்தான் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளேன். மேலும் என்னுடைய வாழ்க்கைக் குறித்த முடிவுகளை எடுக்கும் வயதும் உரிமையும் எனக்கு இருக்கிறது’ என்றார்.

Story image

செப்டம்பர் 18 ஆம் தேதி காலை 11 மணி வரை கல்லூரியில் வகுப்புகளில் கலந்து கொண்டார் சியானி. அதே நாள் பிற்பகலில், சமூக ஊடகம் மூலம் ஒன்பது மாதங்களுக்கு முன்பு நட்பாகி காதலாக மலர்ந்த இந்தியர் ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்காக மதியம் 2.45 கோ ஏர் விமானத்தில் ஏறி அபுதாபிக்குப் பறந்துவிட்டார். சியானி திடீரென்று காணாமல் போனது பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு அதிர்ச்சியளித்தது. அவரது பெற்றோர் தங்கள் மகள் ஐ.எஸ் போன்ற 'இஸ்லாமிய இயக்கத்தினரால் சிக்க வைக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் உள்ளனர். சியானியை ஏமாற்றி மூளைச் சலவை செய்து அவர்கள் கடத்தியிருக்கலாம் என்றும் கூறினர்.

கடந்த சனிக்கிழமை, தனது சொந்த விருப்பத்தின் பேரில் செப்டம்பர் 24 அன்று அபுதாபி நீதிமன்றத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக ஒரு அறிக்கையை வெளியிட்டார் சியானி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.