டெல்லி, மும்பை, பெங்களூரு விமான நிலையங்களை அடுத்து சென்னை 4வது பரபரப்பான விமான நிலையம் ஆகும். நாள் ஒன்றுக்கு குறைந்தது 30,000 பயணிகள் வந்து செல்வதாகவும், கடந்த நிதியாண்டில் சுமார் 2 கோடி பயணிகள் வந்து சென்றதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒரே இடத்தில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் இருப்பது சென்னை விமான நிலையத்தில் மட்டுமே. மேலும், ஏற்கனவே உள்ள 4 டெர்மினல்களுடன் இரண்டு சேட்லைட் டெர்மினல்கள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிவடையும் பட்சத்தில் வருடத்திற்கு 4 கோடி பயணிகள் வந்து செல்வர் என கணக்கிடப்பட்டுள்ளது.