டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

நோயாளிகளின் ஜாதகத்தைக் கணித்து சிகிச்சை அளிக்கும் ஜெய்பூர் மருத்துவமனை

மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் பல்ஸை பரிசோதிக்கிறார்களோ இல்லையோ பர்ஸை பதம் பார்த்து விடுகிறார்கள் தனியார் மருத்துவமனைகள்.

News image
Updated On :28 மே 2019, 11:14 am


ஜெய்பூர்: மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் பல்ஸை பரிசோதிக்கிறார்களோ இல்லையோ பர்ஸை பதம் பார்த்து விடுகிறார்கள் தனியார் மருத்துவமனைகள்.

பல் சொத்தையைப் பிடுங்கப் போய் குடும்ப சொத்தையே பிடுங்கி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டுகளும் பல் மருத்துவர்கள் மீது வைக்கப்படுகிறது.

இதெல்லாம் ஏற்புடைய குற்றச்சாட்டுகள் அல்ல என்றாலும், சமுதாயத்தில் இந்த குற்றச்சாட்டுகள் இருக்கத்தான் செய்கிறது.

இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் புதிய விஷயத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

அதாவது யுனிக் சங்கீதா மெமோரியல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து, கிரக நிலைப்படி அவர்களது நோயின் தீவிரத்தை அறிந்து மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள்.

அதாவது ஒரு நாளைக்கு 25 முதல் 30 நோயாளிகளுக்கு ஜாதகம் பார்க்கப்படுகிறது.  நோயைக் கண்டறியவே ஜாதகம் பார்க்கிறோம். நோயின் தீவிரத்தை அறிந்த பிறகு மருத்துவ சிகிச்சை அளிக்கிறோம். இதன் மூலம் நோயை அறிய எடுத்துக் கொள்ளும் காலம் குறைகிறது என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.