சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

உ.பி.யில் 10 மக்களவை தொகுதிகளை பாஜக வெல்ல உதவியதே காங்கிரஸ்தான்!? சரியாத்தான் சொல்றோமா?

உத்தரப்பிரதேசத்தில் பாஜக மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் நிலையில் இதற்கு அக்கட்சியின் பிரசாரம் காரணம் அல்ல என்றும், 10 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற காங்கிரஸே காரணமாக இருந்தது என்றும் கூறுகிறது புள்ளி விவரங்கள்.

News image
Updated On :27 மே 2019, 10:39 am


லக்னௌ:  உத்தரப்பிரதேசத்தில் பாஜக மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் நிலையில் இதற்கு அக்கட்சியின் பிரசாரம் காரணம் அல்ல என்றும், 10 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற காங்கிரஸே காரணமாக இருந்தது என்றும் கூறுகிறது புள்ளி விவரங்கள்.

அதாவது, சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் இடம்பெற்ற மகாக் கூட்டணியுடன் காங்கிரஸ் கட்சி இணைந்திருந்தால் உத்தரப்பிரதேசத்தின் 10 தொகுதிகளை பாஜக கைப்பற்றியிருக்க முடியாது என்று தெரிகிறது.

அதாவது மகா கூட்டணி பெற்ற மொத்த வாக்குகள் 38.62%. காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்கு 6.3% இதை கூட்டினால் மொத்தம் 44.92% வாக்குகள். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் பாஜக பெற்ற மொத்த வாக்குகள் 49.56%.  ஆனால், உத்தரப்பிரதேசத்தில் படௌன், பண்டா, பஸ்தி, மீரட், சுல்தான்புர், பிரோஸாபாத் உள்ளிட்ட 10 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் மகாக் கூட்டணி பெற்ற வாக்கு சதவீதத்தை விட பாஜக குறைவான வாக்கு சதவீதத்தையே பெற்றுள்ளது. ஒரு வேளை மகாக் கூட்டணியுடன் காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டிருந்தால் இந்த 10 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி அல்லது மகாக் கூட்டணியே வெற்றி பெற்றிருக்கும்.

இந்த 10 தொகுதிகளிலும் மகாக் கூட்டணி - காங்கிரஸ் இணையாததால் வாக்குகள் சிதறச் செய்த காரணத்தால் அது பாஜகவுக்கு பலமாக மாறியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.