பெங்களூரு: இல்லாத செயற்கையான மோடி அலையை உருவாக்கவே கருத்துக் கணிப்புகள் உதவும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி விமர்சித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான ஏழாவது கட்ட வாக்குப்பதிவு ஞாயிறன்று நிறைவடைந்த நிலையில், ஞாயிறு மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. இதில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக அதிக இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்திருந்தன.
இந்நிலையில் இல்லாத செயற்கையான மோடி அலையை உருவாக்கவே இந்த கருத்துக் கணிப்புகள் உதவும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியான ட்வீட்களில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
எளிதில் மோசடி செய்வதற்கு வாய்ப்புள்ள இந்த எந்திரங்களுக்குப் பதிலாக பழையபடி வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்துவதற்காக, எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைக் கூட தட்டியுள்ளன.
உலக அளவில் முன்னேறிய நாடுகள் கூட வழமையான வாக்குச் சீட்டு முறையைத்தான் பயன்படுத்துகின்றன.
ஞாயிறன்று வெளியிடப்பட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளானது, ஆளுங்கட்சியானது வாக்குப்பதிவு எந்திரங்களை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்த முடியும் என்ற எதிர்க்கட்சிகளின் சந்தேகத்தை வலுப்படுவதாக அமைந்துள்ளது.
இத்தகைய கருத்துக் கணிப்புகள் நாட்டில் இன்னும் மோடி அலை நிலவி வருவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயலுகின்றன.
வாக்கு எண்ணிக்கையின் போது பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் குறைவாக கிடைக்கும் பட்சத்தில், எதிர்கட்சிகளை தங்கள் வசம் இழுக்க பாஜக இந்த செயற்கையாக உருவாக்கப்படும் மோடி அலையினை பயன்படுத்தும்.
இத்தகைய கணிப்புகள் ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது தலைவருக்கு ஆதரவான போக்கு நிலவுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவே உதவும்.
பொதுவாக கூறுவதைப்போல இது 'எக்ஸிட் போல்' மட்டுமே; 'எக்ஸாக்ட் போல்' அல்ல..!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை திரும்பும் மக்கள்! செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு... பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள்!

சிஎஸ்கே பேட்டிங்: சர்ஃபராஸ் கானுக்குப் பதிலாக உர்வில் படேல்!

மே 1 முதல் சென்னையில் வெயில் சுட்டெரிக்கும்! தமிழ்நாடு வெதர்மேன்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


