நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

அதனை அறிந்தவுடன் ஒட்டுமொத்த எதிர்கட்சிகளும் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளன: கிரிராஜ் சிங்

ஒட்டுமொத்த எதிர்கட்சிகளும் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் விமர்சித்துள்ளார். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:57 am

ANI

ஒட்டுமொத்த எதிர்கட்சிகளும் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் விமர்சித்துள்ளார். 

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

300-க்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் பாஜக ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு என ஒட்டுமொத்த எதிர்கட்சிகளும் இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை அறிந்தவுடன் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

எனவே மே 23-ஆம் தேதிக்கு பிறகு தங்களது அரசியல் எதிர்காலம் குறித்து இவர்கள் சிந்திக்க வேண்டியிருக்கும் என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.