டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

அதனை அறிந்தவுடன் ஒட்டுமொத்த எதிர்கட்சிகளும் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளன: கிரிராஜ் சிங்

ஒட்டுமொத்த எதிர்கட்சிகளும் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் விமர்சித்துள்ளார். 

News image
Updated On :20 மே 2019, 6:50 am

ஒட்டுமொத்த எதிர்கட்சிகளும் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் விமர்சித்துள்ளார். 

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

300-க்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் பாஜக ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு என ஒட்டுமொத்த எதிர்கட்சிகளும் இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை அறிந்தவுடன் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

எனவே மே 23-ஆம் தேதிக்கு பிறகு தங்களது அரசியல் எதிர்காலம் குறித்து இவர்கள் சிந்திக்க வேண்டியிருக்கும் என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.