சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பாஜக தலைமையிலான அரசில் இருந்து வெளியேற முடிவு: நாகா மக்கள் முன்னணி

மணீப்பூரில் பாஜக தலைமையில் நடைபெறும் ஆட்சியில் இருந்து விலகுவதாக நாகா மக்கள் முன்னணி இன்று (சனிக்கிழமை) அறிவித்தது. 

News image
Updated On :18 மே 2019, 4:24 pm


மணீப்பூரில் பாஜக தலைமையில் நடைபெறும் ஆட்சியில் இருந்து விலகுவதாக நாகா மக்கள் முன்னணி இன்று (சனிக்கிழமை) அறிவித்தது. 

நாகாலாந்தில், நாகா மக்கள் முன்னணி கட்சியில் கடந்த சில நாட்களாகவே பல குழப்பங்கள் எழுந்து வருகிறது. மக்களவைத் தேர்தலில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சிக்கு ஆதரவாக வெளிப்படையாக பிரசாரம் மேற்கொண்டதாக 7 சட்டப்பேரவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது. அவர்களை தகுதி நீக்கம் செய்வதற்கான மனுவையும் சபாநாயகரிடம் அளித்தது. அதேசமயம், 7 சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கட்சித் தலைவர்களும் ராஜிநாமா செய்தனர். 

நாகாலாந்தில் கட்சிக்குள் நிகழும் பிரச்னைகளுக்கு பாஜக தான் காரணம் என்று நாகா மக்கள் முன்னிணி சந்தேகிக்கிறது. நாகாலாந்தில் மாநில அரசின் கூட்டணியில் பாஜகவும் உள்ளது.  

இந்த நிலையில் மணீப்பூரில் பாஜக தலைமையிலான ஆட்சியில் இருந்து வெளியேறுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இதன்மூலம், நாகாலாந்தில் கட்சிக்குள் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்த வேண்டாம் என்ற செய்தியையே பாஜகவிடம் வெளிப்படையாக தெரிவிப்பதற்காக தான் எடுக்கப்பட்ட முடிவுபோல் தெரிகிறது.   

எனினும், பாஜக மற்றும் தேசிய மக்கள் கட்சியின் மக்கள் ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு இதனால் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. மணீப்பூரில் மொத்தம் உள்ள 60 சட்டப்பேரவை உறுப்பினர்களில் பாஜக தலைமையிலான கூட்டணி 40 உறுப்பினர்களுடன் பலமாகவே உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.