நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

தேர்தல் வந்தவுடன் 'பூணூல்' அணிந்துகொள்வார் ராகுல்: ஸ்மிருதி இராணி

போருக்கு பயந்து வயநாடு சென்று பதுங்கிக்கொண்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் குறித்து பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி சரமாரியாகத் தாக்கினார். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:52 am

ANI

போருக்கு பயந்து வயநாடு சென்று பதுங்கிக்கொண்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் குறித்து பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி சரமாரியாகத் தாக்கினார். இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை நடந்த தேர்தல் பிரசாரத்தில் அவர் கூறுகையில்,

பிரதமர் நரேந்திர மோடி இந்த நாட்டுக்காக உழைப்பவர். அதனால் தான் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அவரை தறக்குறைவாக விமர்சித்து வருகின்றன. 5 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் வந்தவுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல், பூணூல் அணிந்துகொள்வார்.

அதுவரை அந்த 5 ஆண்டுகள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று விட்டு தேர்தல் நேரத்தில் மட்டும் இங்கு வந்து பூணூல் அணிந்துகொண்டு, கங்கைக்கு சென்று ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்துவார். 

அவரது சகோதரி பிரியங்கா வதேரா, வாக்கு வங்கிக்காக மட்டுமே அயோத்தி செல்வார், ஆனால் ராமருக்கு தலைவணங்கி வழிபாடு நடத்த மாட்டார். 

சொந்த கட்சியினர் கேட்டுக்கொண்டும், போர் என்றவுடன் பயத்தில் வாராணசி மற்றும் அமேதி தொகுதிகளை புறக்கணித்துவிட்டு, ராகுல் அமேதி சென்று பதுங்கிக்கொண்டார். அவரது சகோதரி பிரியங்கா தேர்தலில் போட்டியிடவே மறுத்துவிட்டார் என்று விளாசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.