அதிநவீன 'அபாச்சி' ரக போர் ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையில் அறிமுகம்
அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட அபாச்சி ரக போர் ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.


அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட அபாச்சி ரக போர் ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

அமெரிக்க அரசு மற்றும் போயிங் நிறுவனங்களுடன் இணைந்து ஏஹெச்-64இ (ஐ) அபாச்சி ரக ஹெலிகாப்டர்களை தயாரிப்பது தொடர்பாக இந்திய விமானப்படை கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டது. மொத்தம் 22 ஹெலிகாப்டர்கள் தயாரிப்பது தொடர்பாக இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

அதனடிப்படையில், அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட அபாச்சி ரக முதல் போர் ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து முதல்கட்ட ஹெலிகாப்டர்கள் ஜூலை மாதத்தில் இந்திய விமானப்படையில் இணைக்கப்படவுள்ளன.

இந்த வகை ஹெலிகாப்டர்களில் ராணுவத்துடன் இணைந்து செயல்படும் தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...