மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரித்தால் பாக். செல்லும் நதிகள் தடுத்து நிறுத்தப்படும்: நிதின் கட்கரி

பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரித்தால் பாகிஸ்தான் செல்லும் நதிகள் தடுத்து நிறுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, புதன்கிழமை எச்சரித்தார். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:51 am

ANI

பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரித்தால் பாகிஸ்தான் செல்லும் நதிகள் தடுத்து நிறுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, புதன்கிழமை எச்சரித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

சிந்து நதி ஒப்பந்தமே இந்தியா, பாகிஸ்தான் இடையிலான நல்லுணர்வை வெளிப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டது ஆகும். ஆனால், புல்வாமா தாக்குதலின மூலம் பாகிஸ்தான் அதை மீறிவிட்டது. இனி வரும் காலங்களிலும் பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளித்து வந்தால், அந்நாட்டுக்குச் செல்லும் 3 நதிகளும் தடுத்து நிறுத்தப்படும்.

மேலும் பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட இதன்மூலம் வழங்கக் கூடாது என்று மக்களும் என்னிடம் வலியுறுத்தி வருகின்றனர். எனவே சிந்து நதி ஒப்பந்தத்தை இனியும் தொடர விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

1960-ஆம் ஆண்டு இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் அயூப் கான் ஆகியோர் இந்த சிந்து நதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

இதன்மூலம் கிழக்குப் பகுதி நதிகளான ரவி, பயீஸ் மற்றும் சுத்லஜ் ஆகியவற்றின் முழு உரிமையும் இந்தியாவை சேரும். மேற்குப் பகுதியில் உள்ள சிந்து, சேனாப் மற்றும் ஜேலம் ஆகிய நதிகள் பாகிஸ்தானுக்கு தடையின்றி வழங்கப்படும். சில சட்டதிட்டங்களுக்குட்பட்டு இந்தியாவும் இந்த நதிகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.