நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 'திடீர்' சந்திப்பு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுலை புதன்கிழமை சந்தித்தார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:51 am

ANI

ஆந்திர முதல்வரும் - தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுலை புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை காலை சந்தித்துப் பேசினார்.

கடந்த சில நாட்களாக பிற மாநில கட்சித் தலைவர்களுடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்து வருவது மத்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும் மத்தியில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகள் இணைந்த 3-ஆவது அணி ஆட்சியை ஏற்படுத்த அவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும், மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவரும், கர்நாடக முதல்வருமான குமாரசாமியுடனான சந்திப்பின் போது காங்கிரஸ் கூட்டணியில் இணைவது தொடர்பாகவும் சந்திரசேகர ராவ் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, சந்திரசகேர ராவ் உடனான சந்திப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிராகரித்துவிட்டார். தேர்தல் பரப்புரை பணிகளில் மும்முரமாக இருப்பதால் சந்திக்க நேரமில்லை என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் தொடரவே திமுக விரும்புவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் உடனான சந்திரபாபு நாயுடுவின் இந்த சந்திப்பு மத்திய கூட்டணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.