நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

சந்திரசேகர ராவ், பினராயி விஜயன் இன்று 'திடீர்' சந்திப்பு

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:50 am

ANI

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கேரள முதல்வர் பினராயி விஜயனை திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த பிரதமர் தொடர்பான பெரும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. பாஜக தரப்பில் மீண்டும் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள போதும், காங்கிரஸ் தரப்பில் ராகுலை இதுவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை.

மேலும் மாநில கட்சிகள் இணைந்து 3-ஆவது அணி அமைத்து மத்தியில் ஆட்சியமைக்கவும் திட்டமிட்டுள்ளன. அவற்றில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், கேரளாவில் எதிர் துருவங்களாகவே உள்ளன. அதுமட்டுமல்லாமல் காங். தலைவர் ராகுல், அமேதி மட்டுமல்லாது கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இதனால் இவ்விரு கட்சிகள் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்நிலையில், சந்திரசேகர ராவ் மற்றும் பினராயி விஜயன் இடையிலான அரசியல் ரீதியிலான இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதன்பின்னர் தமிழகம் வரும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ராமேஸ்வரம் மற்றும் ஸ்ரீரங்கம் கோயில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஹைதராபாத் திரும்புகிறார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.