ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

வைரக் கம்மலை திருடிய எலி: சிவராத்திரி என்பதால் இப்படி நினைத்துக் கொண்டாராம் உரிமையாளர்

பிகாரில் இருக்கும் எலிகளின் புகழ் உலகமெங்கும் பரவியிருக்கும் நிலையில் தற்போது கிடைத்திருப்பது ஒரு சிறிய செய்தி தான்.

News image
Updated On :9 மார்ச் 2019, 12:41 pm

பிகாரில் இருக்கும் எலிகளின் புகழ் உலகமெங்கும் பரவியிருக்கும் நிலையில் தற்போது கிடைத்திருப்பது ஒரு சிறிய செய்தி தான்.

சரி என்னவென்று பார்ப்போம்.

பிகாரில் நகைக் கடை வைத்திருக்கும் தீரஜ்குமார், தனது கடையில் இருந்த வைரக் கம்மல் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். சிசிடிவி கேமராவைப் பார்த்த போது கடந்த வாரம் சிவராத்திரி  அன்று கடையை மூடிய பிறகு ஒரு எலி வந்து, வைரக் கம்மல் இருக்கும் மஞ்சள் நிறப் பையை இழுத்துச் சென்றது தெரிய வந்தது.

கடையில் வேலை செய்பவர்கள் கடையை ஜல்லடைப் போட்டுத் தேடியும் எலியும் கிடைக்கவில்லை. கம்மலும் கிடைக்கவில்லை.

இதனால் மனம் நொந்துவிடவில்லை தீரஜ்குமார். அன்றைய தினம் சிவராத்திரி என்பதால், மாதா பார்வதி தேவிக்கு, விநாயகரின் வாகனமான எலி பரிசளிக்கவே கம்மலை எடுத்துச் சென்றிருக்கும் என்று மனதைதேற்றிக் கொண்டார்.

பார்வதிக்கு பரிசளிக்க எனது கடை நகையைத் தேர்வு செய்ததற்காக நான் மகிழ்கிறேன் என்கிறார் சிரித்தபடி தீரஜ்குமார்.

ஒருவேளை அந்த வைரக் கம்மல் கிடைத்து விட்டால் கூட அதனை கேதார்நாத் சிவன்  கோயிலுக்கு காணிக்கையாக செலுத்து விடுவேன் என்றும் கூறுகிறார் பெரிய மனதுடன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.