மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் காங்கிரசுக்குத்தான் அதிக டி.ஆர்.பி ரேட்டிங்: ஜேட்லி கிண்டல் 

பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் காங்கிரசுக்குத்தான் அதிக டி.ஆர்.பி ரேட்டிங் கிடைக்கிறது என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :7 மார்ச் 2019, 10:29 am

புது தில்லி: பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் காங்கிரசுக்குத்தான் அதிக டி.ஆர்.பி ரேட்டிங் கிடைக்கிறது என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

வியாழனன்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தில்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ரஃபேல் விவகாரத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் இதர தலைவர்கள் தொடர்ந்து கிளப்பிக் கொண்டிருப்பதன் காரணம், தேசிய பாதுகாப்புக்கு எதிராக அக்கட்சியின் தலைவர்கள் பேசி வருவது குறித்து மக்கள் கவனம் செல்லாமல் தடுப்பதற்காகத்தான்.

காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்களின் சமீபத்திய பேச்சுக்களின் காரணமாக அக்கட்சி ஒரு கஷ்டமான சூழலுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் காங்கிரசுக்குத்தான் அதிக டி.ஆர்.பி ரேட்டிங் கிடைக்கிறது. ஆனால் உள்நாட்டில் அவர்களது பேச்சு குறித்து  பெரும் வெறுப்புணர்வுதான் நிலவுகிறது.

ரபேல் விவகாரத்தைப் பொறுத்தவரை மத்திய  அரசு தொடர்ந்து தனது நிலையை தெளிவாக எடுத்துரைத்து விட்டது.  உச்ச நீதிமன்றமும் அதுகுறித்து பேசி விட்டது. தலைமைக் கணக்காயர் அலுலகமும் இதனை ஆய்வு செய்துள்ளது.

ஆனால் தற்போது மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஒருமுறை முயற்சித்துப் பார்க்கிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.