தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

புதிதாக அறிமுகமாக உள்ள 20 ரூபாய் நாணயம் பற்றி அறிய வேண்டிய தகவல்கள்

2009ம் ஆண்டு மார்ச் மாதம் 10 ரூபாய் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டு சரியாக 10 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், 20 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:19 am

ENS


2009ம் ஆண்டு மார்ச் மாதம் 10 ரூபாய் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டு சரியாக 10 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், 20 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுவரை நாணயங்களில் பயன்படுத்தாத வடிவில் 12 பக்கங்களைக் கொண்ட புதிய 20 ரூபாய் நாணயம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த 20 ரூபாய் நாணயத்தின் அகலம் 27 மில்லி மீட்டர் அளவில் இருக்கும். 10 ரூபாய் நாணயம் போலவே இரண்டு உலோக நிறங்களில் மூன்று உலோகங்கள் கலந்ததாகவும், வெளிப்பரப்பு 65 சதவீத காப்பர் உலோகத்தாலும், 15 சதவீதம் துத்தநாகம் மற்றும் 20 சதவீத நிக்கல் என்ற உலோகத்தாலும் அமைக்கப்பட்டிருக்கும். நாணயத்தின் உட்புறம் 75 சதவீத காப்பர், 20 சதவீத துத்தநாகம், 5 சதவீத நிக்கல் கொண்டதாக இருக்கும்.

ஆனால், 10 ரூபாய் நாணயத்தைப் போல விளிம்பில் பற்கள் கொண்ட அமைப்பு இல்லாமல், 20 ரூபாய் நாணயம் அமையும். ஒரு நாணயத்தின் எடை 8.54 கிராம் அளவில் இருக்கும்.

அசோக சக்ரம் மற்றும் சிங்க முகம் கொண்டதாகவும், அதன் கீழே சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தையும் இடம்பெற்றிருக்கும். நாணயத்தின் இடது பக்கம் பாரத் என்ற வார்த்தை ஹிந்தியில் எழுதப்பட்டிருக்கும். நாணயத்தின் வலது பக்கம் இந்தியா என்ற வார்த்தை ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும்.

நாணயத்தில் தானியத்தின் படம் இடம்பெற்றிருக்கும். நாணயங்கள் ரூபாய் தாள்களை விட அதிக ஆயுளைப் பெற்றிருப்பதால் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

10 ரூபாய் நாணயம் அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகளில் 13 புதிய வடிவமைப்புகளில் மாற்றப்பட்டது.  சில மாற்றங்களால், 10 ரூபாய் நாணயம் போலியானது என்று வர்த்தகர்கள் இடையே சந்தேகம் ஏற்பட்டு, சிலர் 10 ரூபாய் நாணயங்கள் வாங்குவதை தவிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.