சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

இந்தியாவிலேயே முதல் முறையாக சிறாருக்கு கடுங்காவல் ஆயுள் சிறைத் தண்டனை விதிப்பு

ஹைதராபாத்தில் 11 வயது சிறுவனை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி கொலை செய்த வழக்கில், இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு சிறாருக்கு கடுங்காவல் ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஜூன் 2019, 9:20 am


ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 11 வயது சிறுவனை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி கொலை செய்த வழக்கில், இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு சிறாருக்கு கடுங்காவல் ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் 2017ம் ஆண்டு நடந்தது. 11 வயது சிறுவனை பள்ளியின் மொட்டை மாடிக்குக் கூட்டிச் சென்ற குற்றவாளி, பாலியல் ரீதியாக துன்பறுத்தி, படுகொலை செய்துவிட்டு உடலை அங்கேயே வீசிவிட்டான்.

சுமார் 10 நாட்களுக்குப் பிறகுதான் அந்த சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. 

காலையில் வீட்டுக்கு வெளியே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மாயமாகி, 10 நாட்கள், அவனது கதி என்னவானது என்று தெரியாமல் இருந்ததால் இந்த சம்பவம் அந்த நேரத்தில் மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தியது.

இறுதியாக வீட்டுக்கு அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியில், குற்றவாளியுடன், சிறுவன் சென்றிருப்பது பதிவானதை வைத்து சிறுவனைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

குற்றவாளியிடம் நடத்திய விசாரணையில், அவனும் குற்றத்தை ஒப்புக் கொண்டு சிறுவனின் உடல் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டினான்.

அப்போதுதான், சிறுவனை, அரசு ஆண்கள் உயர் நிலைப் பள்ளிக்குக் கூட்டிச் சென்று, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு அல்லாமல், சிறுவனை மிகக் கொடூரமாக சித்ரவதை செய்துள்ளான். கை, கால்களை துணியால் கட்டி வைத்து, இரும்புக் கம்பியால் தலையில் ஓங்கி அடித்துக் கொலை செய்துள்ளான் என்று தெரிய வந்தது.

இது குறித்து விசாரித்த காவல்துறையினர், சிறாரான குற்றவாளி மீது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 364, 377, 302, 201 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். கடத்தல், பாலியல் துன்புறுத்தல், கொலை செய்தல், ஆதாரங்களை அழித்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவன் மீது போடப்பட்டது.

ஆரம்பத்தில் இந்த வழக்கு சிறார்களுக்கான நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. பிறகு இந்த வழக்கு ஹைதராபாத்தில் உள்ள குழந்தைகளுக்கான நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 

விசாரணையின் இறுதியில், சிறார்களுக்கான நீதியின் 21வது பிரிவின்படி பார்த்தால், குற்றம்சாட்டப்பட்ட நபர் செய்திருக்கும் குற்றமானது, 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்க வகை செய்கிறது. அதன் அடிப்படையில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சிறாருக்கு கடுங்காவல் ஆயுள் சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.