சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

உன்னாவோ சிறை அட்டூழியம்: கையில் துப்பாக்கி, காரசார மது விருந்து; ஏங்கவிடும் வைரல் விடியோ

பிரயாக்ராஜ் மத்திய சிறை, சுல்தான்புர் மற்றும் ரே பரேலி சிறைகளைத் தொடர்ந்து தற்போது உத்தரப் பிரதேசத்தில் உள்ள உன்னாவோர சிறைவாசிகளின் கொண்டாட்டக் காலம் போல இருக்கிறது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:22 am

ENS


லக்னௌ: பிரயாக்ராஜ் மத்திய சிறை, சுல்தான்புர் மற்றும் ரே பரேலி சிறைகளைத் தொடர்ந்து தற்போது உத்தரப் பிரதேசத்தில் உள்ள உன்னாவோர சிறைவாசிகளின் கொண்டாட்டக் காலம் போல இருக்கிறது.

தடை செய்யப்பட்ட மதுபான வகைகள், அதற்கு ஏற்ற காரசார இணை உணவுகள், கையில் ஒரு பக்கம் செல்போன், மறுபக்கம் துப்பாக்கியைப் பிடித்தபடி வீரதீரப் புகைப்படங்கள் என எதற்கும் பஞ்சம் இல்லாமல் வாழ்கிறார்கள் உன்னாவோ சிறைக் கைதிகள்.

குடத்துடன் தண்ணீர் பிடிக்க அல்லாடும் பொதுமக்களை விட, இவர்களது வாழ்க்கை படு ஜோராகவே இருக்கிறது. உன்னாவோ சிறைவாசிகளின் உன்னத வாழ்க்கை பற்றிய விடியோ பலரையும் தூங்க விடாமல் செய்துள்ளது வேறுகதை.

சரி நேராக விஷயத்துக்கு வரலாம், 
உன்னாவோ மாவட்ட சிறைச் சாலையில் சிறைக் கைதிகளின் புகைப்படம், விடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.  அதில், ஒரு சிறைவாசி தனது கையில் துப்பாக்கியைப் பிடித்தபடி வானை நோக்கிச் சுடும் விடியோ, மதுபான விருந்தின் புகைப்படம் என ஏராளமான கொண்டாட்டங்கள் வெளி உலகத்துக்கு தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் வெளியே வந்ததால் சிறை அதிகாரி, உதவி சிறை அதிகாரி, வார்டன், தலைமை வார்டன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வழக்கம் போல விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. (இன்னமும் இதையெல்லாம் விசாரித்துத்தான் தெரிஞ்சிக்கணுமா?)

இது குறித்து சிறைத்துறை என்ன சொல்கிறது என்றால்? சிறைவாசிகள் வைத்திருக்கும் துப்பாக்கி போலியானது, மண்ணால் செய்யப்பட்டு பெயிண்ட் அடிக்கப்பட்ட ஒன்று, மது விருந்தெல்லாம் இல்லை, பாட்டிலில் ஊற்றப்பட்ட எண்ணெய்தான் என்றெல்லாம் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சரி எல்லாமே பொய்தான், ஆனால் இதையெல்லாம் புகைப்படம் எடுக்க செல்போன் எப்படி கிடைத்தது என்று அடுத்த கேள்வி தொடுக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமா, அந்த விடியோவில் சிறைக் கைதி, கையில் ஆயுதங்களை வைத்துக் கொண்டு, எங்களை எதுவும் செய்ய முடியாது, நாங்கள் சிறைக்குள் இருந்து கொண்டே இயங்குவோம் என்று விடியோவில் பதிவிட்டிருக்கிறார்கள். அதுதான் ஹைலைட்டே!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.