மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

ம.பி. சிறைக் கைதிகள் தப்பிய சம்பவம்: மூளையாக செயல்பட்ட போதைப் பொருள் கடத்தல்காரர் கைது

மத்தியப் பிரதேசத்தில் சிறையில் இருந்து 4 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட போதைப் பொருள் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :24 ஜூன் 2019, 12:46 pm

மத்தியப் பிரதேசத்தில் சிறையில் இருந்து 4 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட போதைப் பொருள் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டார்.

போதைப் பொருள் கடத்தல் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த வினோத் டாங்கி (27) என்பவரே சிறைக் கைதிகள் தப்பிக்க மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

சிறையில் இருந்து வெளியே வந்த வினோத் டாங்கிக்கு, சிறையில் இருந்து தப்பிப்பது குறித்து சில குறிப்புகள் கிடைத்து, அதனை சிறையில் இருக்கும் தனது  தோழர்களை, கடந்த சில நாட்களுக்கு முன்பு பார்வையாளர் போல வந்து, அவர்களுக்கு தெரிவித்து, சிறையில் இருந்து தப்பிக்க யோசனை அளித்துள்ளது விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் காவல்துறையினர் கூறினர்.

மத்தியப் பிரதேச மாநிலம், நீமச் மாவட்டத்தில் கனவாடி சிறைச்சாலை உள்ளது. இங்கு பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த கைதிகளில் 4 பேர் நேற்று அதிகாலை சிறையில் இருந்து தப்பிச்சென்றனர். 

இச்சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. தப்பியோடிய 4 கைதிகள் மீது கொலை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.   சிறையில் இருந்து தப்பியவர்களைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.