கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

ம.பி.: இரவில் இறந்ததாக அறிவிக்கப்பட்டவர் பகலில் உயிர் பிழைத்த அதிசயம்(?)

மத்தியப் பிரதேச அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த முதிய நபர் ஒருவர் இறந்து விட்டதாக இரவில் அறிவித்த அதே மருத்துவர், காலையில் அவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:19 am

ENS


மத்தியப் பிரதேச அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த முதிய நபர் ஒருவர் இறந்து விட்டதாக இரவில் அறிவித்த அதே மருத்துவர், காலையில் அவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

சாகர் மாவட்டம் பினா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்த 72 வயது கிஷண் என்பவர்  வியாழக்கிழமை இரவு மரணம் அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். ஆனால், அதே நபருக்கு காலையில் மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் காலை 10.20 மணிக்கு உண்மையிலேயே உயிரிழந்துவிட்டார்.

வயதான நபர் ஒருவர் மரணம் அடைந்துவிட்டதாக வியாழக்கிழமை இரவு மருத்துவமனையில் இருந்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்களும் உயிரிழந்தவரின் விவரங்களை பதிவு செய்து கொண்டு காலையில் மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது எதிர்பாராத வகையில் உயிரிழந்ததாகக் கூறப்பட்டவர் உயிரோடு சிகிச்சை பெற்று வந்தார். பணியில் இருந்த மருத்துவர், உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நபர் உயிரோடு இருப்பதாகக் காவல்துறையிடம் கூறி, காவலரை திருப்பி அனுப்பி விட்டார்.

ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த முதியவர் வெள்ளிக்கிழமை காலை 10.20க்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இரவே இறந்துவிட்டதாக மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்ட நபர், இரவு முழுவதும் சிகிச்சை கிடைக்காமல் உயிரோடுதான் இருந்துள்ளார். இது முழுக்க முழுக்க மருத்துவர்களின் கவனக் குறைவு என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.