ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பிகாரில் 118 குழந்தைகளின் மரணத்திற்கு காரணம லிச்சிப் பழங்களா?: ஆராய அமைச்சர் உத்தரவு 

பிகாரில் மூளை அழற்சி நோயின் காரணமாக 118 குழந்தைகள் மரணம் அடைந்ததற்கு லிச்சிப் பழங்களை உண்டதுதான் காரணமா என்று ஆராய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

News image
Updated On :21 ஜூன் 2019, 12:57 pm

பாட்னா: பிகாரில் மூளை அழற்சி நோயின் காரணமாக 118 குழந்தைகள் மரணம் அடைந்ததற்கு லிச்சிப் பழங்களை உண்டதுதான் காரணமா என்று ஆராய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

பிகாரின் முஸாபார்நகர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 20 நாட்களில் 118 குழந்தைகள் ஏ.இ.எஸ் எனப்படும் மூளை அழற்சி நோயின் காரணமாக மரணமடைந்துள்ளார். இதற்கு அப்பகுதியில் அதிகமாக வி ளையக் கூடிய லிச்சிப் பழங்களை உண்டதுதான் காரணம் என்று ஒரு கருத்து கூறப்பட்டது. 

இந்தியாவிலேயே பிகாரின் முஸாபார்நகர் மாவட்டம்தான் "லிச்சிப் பழங்களின் மையம்" என்று அழைக்கப்படுகிறது. அத்தனை அதிகமான விளைச்சல் இங்கிருந்து கிடைக்கிறது. பொதுவாக இந்தப் பழங்களின் அறுவடை சமயத்தில்தான் ஏ.இ.எஸ் எனப்படும் மூளை அழற்சி நோயின் பரவல் அதிகமாக் காணப்படுகிறது ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக இந்தப் பழங்களை உட்கொண்டதுதான் குழந்தைகளின் மரணத்திற்கு காரணம் என்று நிரூபிக்கப்படவில்லை.

இந்நிலையில் பிகாரில் மூளை அழற்சி நோயின் காரணமாக 118 குழந்தைகள் மரணம் அடைந்ததற்கு லிச்சிப் பழங்களை உண்டதுதான் காரணமா என்று ஆராய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதுதொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிரேம்குமார் வெள்ளியன்று பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குழந்தைகள் மரணம் அடைந்ததற்கு லிச்சிப் பழங்களை உண்டதுதான் காரணமா என்று ஆராயுமாறு உத்தரவு பிறப்பிக்கபப்ட்டுள்ளது.

இதற்காக விவசாய விஞ்ஞானிகள் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.