ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஆர்வத்தை உண்டாக்காத வெற்றுப் பேச்சு: ஜனாதிபதி உரை குறித்து காங்கிரஸ் கருத்து

ஆர்வத்தை உண்டாக்காத வெற்றுப் பேச்சு என்று வியாழனன்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில்    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிகழ்த்திய உரை குறித்து காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

News image
Updated On :20 ஜூன் 2019, 11:14 am

புது தில்லி: ஆர்வத்தை உண்டாக்காத வெற்றுப் பேச்சு என்று வியாழனன்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில்    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிகழ்த்திய உரை குறித்து காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மோடி அரசு இரண்டாம் முறையாக பதவியேற்றுக் கொண்ட பின்னர், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் வியாழனன்று  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது அவர் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார்.

இந்நிலையில் ஆர்வத்தை உண்டாக்காத வெற்றுப் பேச்சு என்று வியாழனன்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில்    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிகழ்த்திய உரை குறித்து காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி மற்றும் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் ஷர்மா இருவரும் கூட்டாக செய்தியாளர்களை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

ஜனாதிபதியின் உரை என்பது பிரதமர் மோடியின் உரையின் மறு ஒளிபரப்பு போன்றுதான் இருந்தது. அவரது பேச்சில் வேலைவாய்ப்பின்மை மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் வீழ்ச்சி ஆகியவை குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. எனவே இது எந்த ஒரு ஆர்வத்தையும் உண்டாக்காத வெற்றுப் பேச்சாக உள்ளது.

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற பாஜகவின் கோஷத்தை ஆதரிக்கும் வகையில் ஜனாதிபதி பேசியுள்ளார். ஆனால் இந்தியா போன்ற பல்வேறு வேற்றுமைகள் நிறைந்த ஒரு நாட்டில் இது சாத்தியம் இல்லை.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.