ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சீனாவை பின்னுக்குத் தள்ளி 2027க்குள் முதலிடம் பிடிக்கும் இந்தியா! அதான் அதே விஷயத்தில்தான்!!

2050ம் ஆண்டு இந்த புவியில் வாழ்பவர்களின் எண்ணிக்கை சுமார் 950 கோடியாக (950,00,00,000) இருக்கும். 2100ஆம் ஆண்டில் இதுவே 1100 கோடியாக இருக்கும். (1100,00,00,000)

News image
Updated On :18 ஜூன் 2019, 5:33 am


ஐ.நா.: 2050ம் ஆண்டு இந்த புவியில் வாழ்பவர்களின் எண்ணிக்கை சுமார் 950 கோடியாக (950,00,00,000) இருக்கும். 2100ஆம் ஆண்டில் இதுவே 1100 கோடியாக இருக்கும். (1100,00,00,000)

இந்த எண்ணிக்கையில் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே செல்லும்பட்சத்தில் 2027ம் ஆண்டு மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சீனாவை இந்தியா பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அப்போது இந்தியாவில் இருக்கும் மக்கள் தொகை, அமெரிக்காவின் மக்கள் தொகையைக் காட்டிலும் 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட மக்கள் தொகை அறிக்கையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் கணிக்கப்பட்டதை விட, மக்கள் தொகை வளர்ச்சி என்பது சற்று வேகம் குறைவாகவே நடப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தற்போதிருக்கும் 770 கோடி மக்கள் தொகை என்பது, அடுத்த 30 ஆண்டுகளில் 950 கோடியாக அதிகரிக்கும் என்றும், மனிதனின் ஆயுள்காலம் அதிகரிக்கப்பட்டு, வயதானவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.