ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மத்திய மறைமுக வரிகள் ஆணைய உயர் அதிகாரிகள் 15 பேருக்கு கட்டாய ஓய்வு 

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை ஆணைய உயர் அதிகாரிகள் 15 பேருக்கு கட்டாய ஓய்வு அளித்து, நிதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

News image
Updated On :18 ஜூன் 2019, 10:58 am

புது தில்லி: மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை ஆணைய உயர் அதிகாரிகள் 15 பேருக்கு கட்டாய ஓய்வு அளித்து, நிதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக வெற்றி பெற்று சமீபத்தில் பதவியேற்றுக் கொண்டது. அதையடுத்து அரசுத்துறைகளில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  

சமீபத்தில் கூட நடத்தைக் குறைபாடு காரணமாக வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் 12 பேர் பதவிநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை ஆணைய உயர் அதிகாரிகள் 15 பேருக்கு கட்டாய ஓய்வு அளித்து, நிதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இவர்கள் மீது லஞ்சம் கேட்டல், நிதி முறைகேடு மற்றும் குற்றச்சதி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.   

கட்டாய ஓய்வுஅளிக்கப்பட்டவர்களில் இந்தத் துறையின் முதன்மை ஆணையர்கள் மற்றும் ஆணையர்கள் அடங்குவர்.

இந்த 15 அதிகாரிகளில் சென்னை அலுவலகத்தைச் சேர்ந்த ஸ்ரீ ஹர்ஷா எனும் ஆணையரும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.