கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

நிதி ஆயோக்: காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் மன்மோகன் சிங் சந்திப்பு

நிதி ஆயோக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:14 am

ENS


புது தில்லி: நிதி ஆயோக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார்.

புது தில்லியில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெஹ்லாட், புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி, சட்டீஸ்கர் முதல்வர் புபேஷ் பாகெல், கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில், விவசாயத்தை மேம்படுத்துவது, ஆறுகளை புனரமைப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து மன்மோகன் சிங் எடுத்துக் கூறினார். மாவோயிஸ்ட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளுக்கு தொழில் முதலீடுகளைக் கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.