மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

'வாயு' அல்ல சரியான வாலு புயல்: மீண்டும் குஜராத்தை குறிவைத்து யு டர்ன் அடித்தது!

அரபிக் கடலில் உருவாகி குஜராத்தைக் கடந்து சென்ற வாயு புயலானது, மீண்டும் யு டர்ன் அடித்து குஜராத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இது நாளை மறுநாள் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News image
Updated On :15 ஜூன் 2019, 5:26 am


அரபிக் கடலில் உருவாகி குஜராத்தைக் கடந்து சென்ற வாயு புயலானது, மீண்டும் யு டர்ன் அடித்து குஜராத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இது நாளை மறுநாள் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாயு புயலானது கடந்த புதன்கிழமை இரவு அல்லது வியாழக்கிழமை காலை குஜராத்தில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக கடற்கரையோரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

ஆனால் கடைசி நேரத்தில் குஜராத்தின் கரைப் பகுதியைக் கடக்காமல் கடந்து சென்றது வாயு புயல். நூலிழையில் தப்பியதாக குஜராத் அரசும், மக்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

ஆனால், சென்ற வேகத்தில் யு டர்ன் அடித்து மீண்டும் குஜராத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இது ஜூன் 16ம் தேதி குஜராத்தை நெருங்கி வந்து, 17 - 18ம் தேதிக்கு இடையே கட்ச் பகுதியில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அதி தீவிரப் புயலாக இருக்கும் வாயு, குஜராத்தை நெருங்கும் போது புயல் சின்னமாக அல்லது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக வலுவிழந்துதான் கரையைக் கடக்கும் என்று புவியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

புதன்கிழமை பாதுகாப்பான இடங்களுக்குச் சென்ற மக்கள் நேற்று முதல் தங்களது பகுதிக்கு திரும்பியதும், இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் குஜராத்தை அச்சுறுத்தும் வாயு புயலால் முன்னேற்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.