ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பாட்னா விமான நிலையத்தை தகர்ப்பேன்: மிரட்டல் விடுத்த 2ம் வகுப்பு மாணவன்

போஜ்புரி ஹிந்தி படத்தைப் பார்த்து அதன் தாக்கத்தால், பாட்னாவில் உள்ள ஜெய் பிரஜாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்துக்கு 2ம் வகுப்பு மாணவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறித்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :11 ஜூன் 2019, 10:21 am


பாட்னா: போஜ்புரி ஹிந்தி படத்தைப் பார்த்து அதன் தாக்கத்தால், பாட்னாவில் உள்ள ஜெய் பிரஜாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்துக்கு 2ம் வகுப்பு மாணவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறித்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் அழைப்பை செய்தது வெறும் 8 வயது சிறுவன் என்பதை அறிந்த காவல்துறையினர் கடும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர்.

தொலைபேசி அழைப்பு வந்த எண் குறித்து விசாரணை நடத்தியதில், பிர்லா காலனியைச் சேர்ந்த சித்தாந்த் ஷர்மா என்பவரது பெயரில் அது பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த முகவரிக்குச் சென்ற காவல்துறையினர், ஷர்மாவிடம் விசாரணை நடத்திய போது, அவரது 8 வயது பேரன், தானே இந்த மிரட்டலை விடுத்ததாக ஒப்புக் கொண்டார்.

தனது தாத்தா உறங்கும் போது அவரது செல்போனை தான் பயன்படுத்துவது வழக்கம் என்றும், கூகுளில் பாட்னா விமான நிலையத்தின் போன் நம்பரை தேடி, வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் வாக்குமூலம் அளித்தான்.

மேலும் அவன் கூறுகையில், போஜ்புரி படத்தில் வரும் ஒரு காட்சியில் விமான நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகக் கூறும் வசனம் தன்னை அதிகம் ஈர்த்ததாகவும், அதற்காகவே தானும் போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளான். 

காவல்துறையினர் சிறுவனை விசாரித்து, மீண்டும் இதுபோன்ற தவறை செய்யக் கூடாது என்று அறிவுறுத்தி விடுவிக்க முடிவு செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.