ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

குடும்பத்தினரை கத்தியால் குத்திய பின்னர் 'பேஸ்புக் லைவ்' போட்ட  இளைஞர்! 

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தினரை கத்தியால் குத்திய பின்னர், நிதானமாக 'பேஸ்புக் லைவ்' செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :10 ஜூன் 2019, 11:08 am

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தினரை கத்தியால் குத்திய பின்னர், நிதானமாக 'பேஸ்புக் லைவ்' செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஹுக்ளி மாவட்டத்தில் உள்ள கியோட்டா சப்தாலா என்ற இடத்தில் இந்த்ரநில் ராய் என்ற இளைஞர்தான் இந்த கொடும் செயலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக வழக்கில் விசாரணை செய்துவரும் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அந்த இளைஞர் ஞாயிறு இரவு தனது குடும்பத்தினரை கத்தியால் தாக்கியுள்ளார். இதில் அவரது பாட்டியான ஆரத்தி ராய் (80) காயங்களினால் மரணமடைந்து விட்டார். சிறிய அள்வு காயமடைந்த அவரது பெற்றோர்கள் தற்போது நலமாக உள்ளார்கள். இந்த சம்பவத்திற்குப் பிறகு அவர் 'பேஸ்புக் லைவ்' செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விசாரித்து    வருகிறோம்.

அந்த இளைஞர் கைதுசெய்யப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் போதைக்கு அடிமையானவர் என்பதும், சமீப காலமாக அவர் வன்முறையான மனநிலையுடன் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.