கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

கேரள இளைஞர் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதி

கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கான அறிகுறியுடன் ஒரு இளைஞர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 8:04 am

ENS


கொச்சி: கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கான அறிகுறியுடன் ஒரு இளைஞர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா, எர்ணாகுளம் மாவட்டம் வடகேகர கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நிபா வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படுவதால் மிகவும் பாதுகாப்பான முறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

பாதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவ பரிசோதனைகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்ட போது 18 பேர் உயிரிழந்தது நினைவில் கொள்ளத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.