ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

எதற்காக நான் பதவி விலகணும்? அப்பாவியாகக் கேட்கிறார் முதல்வர் குமாரசாமி!

16 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பதால் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு கவிழும் நிலையில், நான் எதற்காக பதவி விலக வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.

News image
Updated On :11 ஜூலை 2019, 10:37 am


16 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பதால் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு கவிழும் நிலையில், நான் எதற்காக பதவி விலக வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களுடன் முதல்வர் குமாரசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புக்குப் பிறகு அவர் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், எதிர்பார்ப்புகளை எல்லாம் தவிடுபொடியாக்கி, குமாரசாமி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது, ஏன் நான் பதவி விலக வேண்டும்? நான் பதவி விலக வேண்டியதன்அவசியம் என்ன? என்பதே குமாரசாமியின் கேள்வி.

மேலும் அவர் பேசுகையில், கூட்டணி அரசு நீடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எங்கள் அரசு கவிழ்க்கப்படாது. கடந்த காலங்களை விட தற்போதைய சூழல் இக்கட்டானதாகவே உள்ளது என்று தெரிவித்தார்.

கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் (13 எம்எல்ஏக்கள்) மற்றும் மஜத (3 எம்எல்ஏக்கள்) எம்எல்ஏக்கள் 16 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்திருப்பதால், கூட்டணி ஆட்சியின் பெரும்பான்மை பலம் குறைந்துள்ளது.

இது குறித்து குமாரசாமி கூறுகையில், 2009 - 10ம் ஆண்டில் பாஜக ஆட்சியின்போது சில அமைச்சர்கள் உட்பட 18 எம்எல்ஏக்கள் அப்போது முதல்வராக இருந்த எடியூரப்பாவை எதிர்த்தனர். ஆனால், அப்போது அவர் பதவி விலகவில்லையே என்று கேள்வி எழுப்பினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.