மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

அமர்நாத் யாத்திரை: 4,823 பக்தர்களுடன் அமர்நாத் நோக்கி 3வது குழு பயணம்

பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக மலை அடிவாரத்திலிருந்து 4,823 யாத்ரீகர்கள் அடங்கிய மூன்றாவது குழு அமர்நாத் யாத்திரைக்கு செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டது.

News image

அமர்நாத் யாத்திரை மேற்கொண்டுவரும் யாத்ரீகர்களுக்காக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சிஆர்பிஎஃப் வீரர்கள். நாள்: திங்கள்கிழமை

Updated On :2 ஜூலை 2019, 7:11 am

பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக மலை அடிவாரத்திலிருந்து 4,823 யாத்ரீகர்கள் அடங்கிய மூன்றாவது குழு அமர்நாத் யாத்திரைக்கு செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டது.

3,880 மீட்டர் உயரத்தில் இருக்கும் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக இந்த ஆண்டு 1.5 லட்சத்துக்கும் அதிகமான யாத்ரீகர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கும் அமர்நாத் யாத்திரை, பலத்த பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முதல் இரண்டு குழுக்கள் முறையே ஞாயிறு மற்றும் திங்கட்கிழமையில் புறப்பட்டுச் சென்ற நிலையில், இன்று 936 பெண்கள், 3,759 ஆண்கள் என 223 வாகனங்களில் பகவதி நகர் முகாமில் இருந்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் மூன்றாவது குழு புறப்பட்டுள்ளது.

பஹல்காம், பல்தால் ஆகிய வழிப் பாதைகளில் இவர்கள் செல்வார்கள். சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புப் பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர். அமர்நாத் யாத்திரை ஆகஸ்டு 15ஆம் தேதி நிறைவடையவுள்ளது.  

திங்கட்கிழமை மாலை வரை 8,403 பக்தர்கள் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசித்துவிட்டு பாதுகாப்பாக திரும்பியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.