டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

மாநிலங்களவையில் தமிழக உறுப்பினர்களை பெயர்  கூறி வெளியேறச் சொன்ன வெங்கய்ய நாயுடு 

மாநிலங்களவையில் தொடர்ந்து எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பிய தமிழக உறுப்பினர்களை மாநிலங்களவைத்  தலைவரான  துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பெயர்  கூறி வெளியேறச் சொன்ன சம்பவம் நிகழ்ந்துள்ளது.  

News image
Updated On :2 ஜனவரி 2019, 11:08 am

புது தில்லி: மாநிலங்களவையில் தொடர்ந்து எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பிய தமிழக உறுப்பினர்களை மாநிலங்களவைத்  தலைவரான துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பெயர்  கூறி வெளியேறச் சொன்ன சம்பவம் நிகழ்ந்துள்ளது.  

புதன்கிழமையன்று மாநிலங்களவை கூடியதும் கர்நாடகாவின் மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி வந்தனர். இதன் காரணமாக அவை அடிக்கடி ஒத்தி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் தொடர்ந்து எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பிய தமிழக உறுப்பினர்களை மாநிலங்களவைத்  தலைவரான  துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பெயர்  கூறி வெளியேறச் சொன்ன சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

உணவு இடைவேளைக்குப் பிறகு மதியம் அவை கூடியதும், மாநிலங்களவைத்  தலைவரான  வெங்கய்ய நாயுடு தமிழகத்தைச் சேர்ந்த சில உறுப்பினர்களை பெயரைக் கூறி எழுப்பி, இன்று முழுவதும் அவையில் இருந்து வெளியேறிச் செல்லுங்கள் என்று உத்தரவிட்டார். 

அவ்வாறு கூறப்பட்டவர்களில் திமுகவின் கனிமொழி மற்றும் திருச்சி சிவா, அதிமுகவின் நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த் மற்றும் செல்வராஜ் ஆகியோர் அடங்குவர். 

அவ்வாறு உத்தரவிட்ட பிறகு அவை 15 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்படுவதாக வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.