பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

ராணுவ நடவடிக்கையால் மக்களவைத் தேர்தலில் பாஜக 22க்கும் மேற்பட்ட இடங்களில் ஜெயிக்கும்: எடியூரப்பா 

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்து இந்தியப் பிரதமராக மோடியை மீண்டும் பதவியில் அமரவைக்க கர்நாடக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பாஜக தலைவர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :28 பிப்ரவரி 2019, 12:08 pm


சித்ரதுர்கா: வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்து இந்தியப் பிரதமராக மோடியை மீண்டும் பதவியில் அமரவைக்க கர்நாடக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பாஜக தலைவர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய எடியூரப்பா, பாகிஸ்தான் மண்ணில் இருக்கும் பயங்கரவாத முகாம்களை அழிக்க ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி முடிவெடுத்து, நடத்தப்பட்ட தாக்குதல்கள் இந்திய இளைஞர்களையும், மக்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது.  இதன் மூலம் கர்நாடகாவில் பாஜக அதிக தொகுதிகளை வெல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அதிரடித் தாக்குதல் நிச்சயம் மோடிக்கு பலம் சேர்க்கும் என்றும்  தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்களை இந்திய ஆயுதப் படையினர் தாக்கி அழித்திருப்பதன் மூலம் கர்நாடகாவில் பாஜக இருபத்து இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அவர் துல்லியமாகக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்று மீண்டும் பிரதமராவார் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.