நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ராணுவ நடவடிக்கையால் மக்களவைத் தேர்தலில் பாஜக 22க்கும் மேற்பட்ட இடங்களில் ஜெயிக்கும்: எடியூரப்பா 

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்து இந்தியப் பிரதமராக மோடியை மீண்டும் பதவியில் அமரவைக்க கர்நாடக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பாஜக தலைவர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:15 am

ENS


சித்ரதுர்கா: வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்து இந்தியப் பிரதமராக மோடியை மீண்டும் பதவியில் அமரவைக்க கர்நாடக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பாஜக தலைவர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய எடியூரப்பா, பாகிஸ்தான் மண்ணில் இருக்கும் பயங்கரவாத முகாம்களை அழிக்க ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி முடிவெடுத்து, நடத்தப்பட்ட தாக்குதல்கள் இந்திய இளைஞர்களையும், மக்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது.  இதன் மூலம் கர்நாடகாவில் பாஜக அதிக தொகுதிகளை வெல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அதிரடித் தாக்குதல் நிச்சயம் மோடிக்கு பலம் சேர்க்கும் என்றும்  தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்களை இந்திய ஆயுதப் படையினர் தாக்கி அழித்திருப்பதன் மூலம் கர்நாடகாவில் பாஜக இருபத்து இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அவர் துல்லியமாகக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்று மீண்டும் பிரதமராவார் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.