டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

சமர்ப்பிக்கப்பட்ட உத்தரபிரதேச பட்ஜெட்: பசுப்பாதுகாப்புக்கு ரூ. 600 கோடி ஒதுக்கீடு 

2019-20 ஆம் ஆண்டுக்கான உத்தரபிரதேச மாநில பட்ஜெட் சட்டப்பேரவையில் வியாழனன்று தாக்கல் செய்யப்பட்டது.

News image
Updated On :7 பிப்ரவரி 2019, 9:47 am

லக்னௌ: 2019-20 ஆம் ஆண்டுக்கான உத்தரபிரதேச மாநில பட்ஜெட் சட்டப்பேரவையில் வியாழனன்று தாக்கல் செய்யப்பட்டது.

2019-20 ஆம் ஆண்டுக்கான உத்தரபிரதேச மாநில பட்ஜெட்டை மாநில நிதியமைச்சர் ராஜேஷ் அகர்வால், வியாழனன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

ரூ. 4.79 லட்சம் கோடி மதிப்பிலான இந்த பட்ஜெட்டானது  விவசாயிகள் மேம்பாடு, சுகாதாரத் துறை வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும், வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயத் துறை மேம்பாட்டுக்கென ரூ. 1500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல பசுப்பாதுகாப்புக்கு மட்டும் ரூ. 600 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மாநில கலால் துறை சார்பாக மாநிலம் முழுவதும் கால்நடை கொட்டகை கள் கட்டுவதற்குகாக சிறப்பு செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் ரூ. 165 கோடி வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் கிராமப்புற பகுதிகளில் கோசாலைகளை உருவாக்கி பராமரிப்பதற்காக ரூ. 247.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் நகர்ப்புற பகுதிகளில் கைவிடப்பட்ட கால்நடைகளை பராமரிக்க "கன்ஹா கோசாலைகாலை" உருவாக்குவதற்காக மற்றொரு 200 கோடி ரூபாய் ஓதுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு காரணங்களுக்காக பறிமுதல் செய்யப்படும் கால்நடைகளை பராமரிக்கும் இல்லங்களை உருவாக்க ரூ. 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.