குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

ஜேட்லியின் உடல்நிலை கவலைக்கிடம்: உ.பியில் அமைச்சரவை மறுசீரமைப்பு நிகழ்வு ஒத்திவைப்பு!

மத்திய முன்னாள் அமைச்சர் அருண் ஜேட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதையடுத்து, உத்தரப்பிரதேச மாநில அமைச்சரவை மறுசீரமைப்பு  நிகழ்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:51 am

ENS

மத்திய முன்னாள் அமைச்சர் அருண் ஜேட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதையடுத்து, உத்தரப்பிரதேச மாநில அமைச்சரவை மறுசீரமைப்பு  நிகழ்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  

உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது இந்த அமைச்சரவையில் முதல்வர் உள்பட 43 அமைச்சர்கள் பதவியில் உள்ளனர். இரண்டு துணை முதல்வர்கள், 18 கேபினட் அமைச்சர்கள், 9 தனிப்பொறுப்புடன் கூடிய மாநில அமைச்சர்கள் மற்றும் 13 இணை அமைச்சர்கள் ஆகியோர் இதில் அடங்குவர். மொத்தமாக 403 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில், அதிகபட்சமாக முதல்வர் உள்பட 63 அமைச்சர்களை நியமிக்க முடியும். அந்த வகையில், இன்னும் காலியாக உள்ள துறைகளுக்கு 20 அமைச்சர்களை நியமிக்கலாம். 

இந்நிலையில், அமைச்சரவையில் மாற்றம் மற்றும் புதிய அமைச்சர்களை நியமிப்பது குறித்து இரு தினங்களுக்கு முன்னதாகவே, பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவிடம், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை செய்தார். நேற்று  அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேலையும் சந்தித்து பேசியிருந்தார். இன்று (திங்கட்கிழமை) அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்று மாநில அரசு தகவல் தெரிவித்திருந்தது. 

ஆனால், மத்திய முன்னாள் அமைச்சர் அருண் ஜேட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதையடுத்து, அமைச்சரவை மாற்ற நிகழ்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும், நிலைமை சீராகும் பட்சத்தில் இந்த வார இறுதிக்குள் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.