ஆனால், கர்நாடக அமைச்சரவையில் யார், யாருக்கு இடமளிப்பது என்பது குறித்து முடிவெடுக்கவே கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல்வர் எடியூரப்பா டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார். கர்நாடக அமைச்சரவை குறித்த ஆலோசனையும் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், முடிவு எட்டப்படவில்லை. அந்த சமயத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்ததால், எடியூரப்பா அமித் ஷாவை சந்தித்து பேச முடியவில்லை. முத்தலாக் மசோதா, காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாக்கள் நடைபெற்றுக்கொண்டிருந்ததால், பாஜக தலைமை கர்நாடக அமைச்சரவை விவகாரத்தை கண்டுகொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும்.