கிரிக்கெட் வீரர் முகமது ஷமி வீட்டில் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறி அவரது மனைவி ஹசீன் ஜஹன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் சஹஸ்பூர் அலி நகரிலுள்ள முகமது ஷமி வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்ற ஜஹன் அங்கு ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து வெளியேறுமாறு ஷமியின் சகோதரிகள் கூறிய பின்னர், அவர் தனது குழந்தையுடன் சென்று ஒரு அறையில் உள்பக்கம் பூட்டிக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, இரு தரப்பிலும் உள்ள பிரச்னைகள் குறித்து விசாரிக்க நேரமில்லாத சூழலில், அம்ரோஹா எனுமிடத்தில் உ.பி. போலீஸாரால் ஹசீன் ஜஹன் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் ஹசீன் ஜஹன் கூறியதாவது: எனது கணவரின் வீட்டில் இருப்பதற்கு எனக்கு அனைத்து உரிமையும் உள்ளது. அதனால் தான் நான் இங்கு வந்தேன். ஆனால், அங்குள்ள ஷமியின் சகோதரிகள் என்னிடம் தவறாக நடந்துகொண்டனர். இதற்கு போலீஸாரும் உடந்தையாக உள்ளனர். அவர்களை கைது செய்வதற்கு பதிலாக என்னை கைது செய்தனர் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


