கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

கௌதம் கம்பீர் மீது வழக்குப்பதிவு: தில்லி போலீஸ் நடவடிக்கை

கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக கௌதம் கம்பீர் களமிறங்குகிறார். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:46 am

ANI

கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கௌதம் கம்பீர் இரு வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்துள்ளதாக அத்தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அதிஷி தில்லியில் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: 

கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக கௌதம் கம்பீர் களமிறங்குகிறார். இதனிடையே அவரது வேட்புமனுவில் பல தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன மற்றும் இரு வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்துள்ளதாக அத்தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்நிலையில், கௌதம் கம்பீர் மீது தில்லி போலீஸார், சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறி தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, அனுமதி பெறாமல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாகக் கூறி, நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு தில்லி தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.