கௌதம் கம்பீர் மீது வழக்குப்பதிவு: தில்லி போலீஸ் நடவடிக்கை
கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக கௌதம் கம்பீர் களமிறங்குகிறார்.


கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கௌதம் கம்பீர் இரு வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்துள்ளதாக அத்தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அதிஷி தில்லியில் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக கௌதம் கம்பீர் களமிறங்குகிறார். இதனிடையே அவரது வேட்புமனுவில் பல தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன மற்றும் இரு வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்துள்ளதாக அத்தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், கௌதம் கம்பீர் மீது தில்லி போலீஸார், சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறி தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அனுமதி பெறாமல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாகக் கூறி, நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு தில்லி தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...