ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

யாசின் மாலிக் 'சுயமரியாதைக்காரர்': பி.சி.சாக்கோ புகழாரம்

பிரிவினைவாதத் தலைவன் யாசின் மாலிக் சிறந்த சுயமரியாதைக்காரர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ புகழாரம் சூட்டியுள்ளார்.

News image
Updated On :27 ஏப்ரல் 2019, 10:19 am

பிரிவினைவாதத் தலைவன் யாசின் மாலிக் சிறந்த சுயமரியாதைக்காரர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து சனிக்கிழமை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

பிரக்யா சிங் தாகூர் போன்ற குற்றவாளிகள் எல்லாம் தேர்தலில் போட்டியிட முடியும் என்றால், பிரிவினை கோரும் யாசின் மாலிக்கை மத்திய அரசு எதற்காக துப்பாக்கி முனையில் கைது செய்ய வேண்டும். அதுபோன்ற சமயங்களில் அனைத்து சுயமரியாதைக்காரர்களும் யாசின் மாலிக் போன்றுதான் செயல்படுவார்கள். 

காங்கிரஸ் கட்சி என்றுமே யாசின் மாலிக்கின் சித்தாந்தங்கள் மற்றும் நடவடிக்கைகளை ஆதரித்தது கிடையாது. ஆனால், அவர் போன்ற ஒருவர் வெளிப்படுத்திய வீரம் போற்றுதலுக்கும், பாராட்டுக்கும் உரியது. ஏனென்றால் யாரை வேண்டுமானாலும் மிரட்டலாம் என்ற மத்திய அரசின் போக்கை அவர் தைரியமாக எதிர்த்துள்ளார். 

ஏனென்றால் இந்தியா ஜனநாயக நாடு என்று புகழாரம் சூட்டியுள்ளார். 

ஜம்மு-காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவன் யாசின் மாலிக், மே மாதம் 24-ஆம் தேதி வரை பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கிய வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ளான். அவனுடைய இயக்கத்துக்கு மத்திய அரசால் அம்மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 1989-ஆம் ஆண்டு, முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் முஃப்தி முகமது சயீது மகள் ரூபையா சயீது கடத்தல் விவகாரம் தொடர்பாக 2 சிபிஐ வழக்குகள் உள்ளன.

அதுமட்டுமல்லாமல் 1990-ஆம் ஆண்டு இந்திய விமானப்படையைச் சேர்ந்த 4 வீரர்களின் மரணம் தொடர்பான வழக்கும் யாசின் மாலிக் மீது உள்ளது குறிப்பிடடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.