கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

யாசின் மாலிக் 'சுயமரியாதைக்காரர்': பி.சி.சாக்கோ புகழாரம்

பிரிவினைவாதத் தலைவன் யாசின் மாலிக் சிறந்த சுயமரியாதைக்காரர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ புகழாரம் சூட்டியுள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:46 am

ANI

பிரிவினைவாதத் தலைவன் யாசின் மாலிக் சிறந்த சுயமரியாதைக்காரர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து சனிக்கிழமை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

பிரக்யா சிங் தாகூர் போன்ற குற்றவாளிகள் எல்லாம் தேர்தலில் போட்டியிட முடியும் என்றால், பிரிவினை கோரும் யாசின் மாலிக்கை மத்திய அரசு எதற்காக துப்பாக்கி முனையில் கைது செய்ய வேண்டும். அதுபோன்ற சமயங்களில் அனைத்து சுயமரியாதைக்காரர்களும் யாசின் மாலிக் போன்றுதான் செயல்படுவார்கள். 

காங்கிரஸ் கட்சி என்றுமே யாசின் மாலிக்கின் சித்தாந்தங்கள் மற்றும் நடவடிக்கைகளை ஆதரித்தது கிடையாது. ஆனால், அவர் போன்ற ஒருவர் வெளிப்படுத்திய வீரம் போற்றுதலுக்கும், பாராட்டுக்கும் உரியது. ஏனென்றால் யாரை வேண்டுமானாலும் மிரட்டலாம் என்ற மத்திய அரசின் போக்கை அவர் தைரியமாக எதிர்த்துள்ளார். 

ஏனென்றால் இந்தியா ஜனநாயக நாடு என்று புகழாரம் சூட்டியுள்ளார். 

ஜம்மு-காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவன் யாசின் மாலிக், மே மாதம் 24-ஆம் தேதி வரை பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கிய வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ளான். அவனுடைய இயக்கத்துக்கு மத்திய அரசால் அம்மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 1989-ஆம் ஆண்டு, முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் முஃப்தி முகமது சயீது மகள் ரூபையா சயீது கடத்தல் விவகாரம் தொடர்பாக 2 சிபிஐ வழக்குகள் உள்ளன.

அதுமட்டுமல்லாமல் 1990-ஆம் ஆண்டு இந்திய விமானப்படையைச் சேர்ந்த 4 வீரர்களின் மரணம் தொடர்பான வழக்கும் யாசின் மாலிக் மீது உள்ளது குறிப்பிடடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.