மழை குறைந்ததன் எதிரொலியாக பங்கனப்பள்ளி மாம்பழத்தின் விளைச்சல் சரிந்தது
கடந்த ஆண்டு பருவ மழை போதிய அளவுக்குப் பெய்யாமல் ஏமாற்றியதால் தற்போது விவசாயம் முதல் குடிநீர் வரை பல பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளோம்.


கடந்த ஆண்டு பருவ மழை போதிய அளவுக்குப் பெய்யாமல் ஏமாற்றியதால் தற்போது விவசாயம் முதல் குடிநீர் வரை பல பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளோம்.
கோடை வெயில் தொடங்கியதும் சந்தைக்கு வரத் தொடங்கும் மாம்பழ வரத்து தற்போது குறைந்து காணப்படுகிறது.
இந்த நிலையில் ஆந்திராவில் விளையும் மாம்பழங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் பங்கனப்பள்ளி மாம்பழங்களை அவ்வளவு அதிகமாகப் பார்க்க முடியவில்லை.
2500 ஹெக்டேரில் விளைவிக்கப்படும் பங்கனப்பள்ளி மாம்பழம் இந்த முறை ஆந்திராவில் வெறும் 600 ஹெக்டேரில் மட்டுமே விளைவிக்கப்பட்டுள்ளது. இதன் தேவை உலக நாடுகளிலும் அதிகமாக இருப்பதால் இந்தியாவின் இதன் விலையும் அதிகரித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக போதிய மழை இன்மை, இந்த ஆண்டு பங்கனப்பள்ளி மாம்பழத்தின் விளைச்சலை சுருக்கிவிட்டுச் சென்றுள்ளது. இதனால் மாம்பழ பிரியர்கள் அதிக விலை கொடுத்துத்தான் பங்கனப்பள்ளி மாம்பழத்தை வாங்க வேண்டியது இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...