ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

சீல் வைத்த பெட்டியில் விழும் வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் சிதறியது எப்படி? விசாரணைக்கு உத்தரவு

ஏப்ரல் 11ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று 4 நாட்களுக்குப் பிறகு, வாக்குப்பதிவு நடைபெற்ற அரசுப் பள்ளி ஒன்றில் வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் சிதறிக் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :16 ஏப்ரல் 2019, 12:11 pm

விஜயவாடா: ஏப்ரல் 11ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று 4 நாட்களுக்குப் பிறகு, வாக்குப்பதிவு நடைபெற்ற அரசுப் பள்ளி ஒன்றில் வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் சிதறிக் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் அத்மகுர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள், ஏராளமான வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் சிதறிக் கிடப்பதைப் பார்த்து ஆசிரியர்களுக்குத் தெரிவித்தனர். இந்த விஷயம் ஊடகங்களுக்குத் தெரியவர விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

உடனடியாக பள்ளிக்கு விரைந்து வந்த வருவாய்த் துறை அதிகாரிகள், அவை வெறும் டம்மி ஸ்லிப்புகள் என்றும், வாக்குப் பதிவு இயந்திரத்துடன், வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை இணைத்து சோதித்துப் பார்க்கும் போது வரும் ஸ்லிப்புகள் என்றும் விளக்கம் அளித்தனர்.

அதே சமயம், அவை உடனடியாக தேர்தல் அதிகாரிகளால் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும், அதிகாரிகளின் கவனக்குறைவினால் அவை அப்படியே போடப்பட்டதே இந்த சர்ச்சைக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.