கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

ஏ,பி,சி,டி என கிராமங்களை வகைப்படுத்துவேன்: மேனகாவின் அடுத்த சர்ச்சைப் பேச்சு

முஸ்லிம் மக்கள் எனக்குத்தான் வாக்களிக்க வேண்டும். இல்லையென்றால் வேலை வாய்ப்பு வழங்கப்படாது என்று பேசி சர்ச்சைக்குள்ளான பாஜக இணை அமைச்சர் மேனகா காந்தி, இன்று அடுத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:40 am

ENS


முஸ்லிம் மக்கள் எனக்குத்தான் வாக்களிக்க வேண்டும். இல்லையென்றால் வேலை வாய்ப்பு வழங்கப்படாது என்று பேசி சர்ச்சைக்குள்ளான பாஜக இணை அமைச்சர் மேனகா காந்தி, இன்று அடுத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

வாக்களிக்கும் மக்களுக்கு ஏற்ப கிராமத்தை ஏ பி சி டி என வகைப்படுத்தியே நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்று மேனகா காந்தி கூறியிருப்பது தான் அடுத்த சர்ச்சையாகியுள்ளது.

அதாவது, ஒவ்வொரு கிராமத்திலும் எத்தனை சதவீத வாக்குகள் பதிவாகிறது என்பதைப் பொறுத்தே அந்த கிராமத்துக்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.

பாஜகவுக்கு எந்த கிராமத்தில் 80 சதவீத வாக்குகள் பதிவாகிறதோ அந்த கிராமம் ஏ பிரிவில் வைக்கப்பட்டு, அந்த கிராமத்துக்குத்தான் 80 சதவீத நலத்திட்டப் பணிகள் செய்யப்படும். எந்த நலத்திட்டமாக இருந்தாலும் முன்னுரிமை வழங்கப்படும். அதே சமயம் 60 சதவீதம் வாக்குகள் அளிக்கும் கிராமத்துக்கு பி பிரிவு வழங்கப்பட்டு, 60 சதவீதப் பணிகள் மேற்கொள்ளப்படும். இரண்டாவது இடத்தில் வைக்கப்பட்டு முன்னுரிமை அளிக்கப்படும்.

இதே நிலைதான் அடுத்தடுத்து 50 மற்றும் 30 சதவீத வாக்குகள் பதிவான கிராமங்கள் சி மற்றும் டி பிரிவில் வைக்கப்படுவதும், நலத்திட்டப் பணிகள் நடைபெறுவதும். 

ஏபிசிடி அடிப்படையில்தான் அனைத்து நலத்திட்டப் பணிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று மேனகா காந்தி கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.