ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஏ,பி,சி,டி என கிராமங்களை வகைப்படுத்துவேன்: மேனகாவின் அடுத்த சர்ச்சைப் பேச்சு

முஸ்லிம் மக்கள் எனக்குத்தான் வாக்களிக்க வேண்டும். இல்லையென்றால் வேலை வாய்ப்பு வழங்கப்படாது என்று பேசி சர்ச்சைக்குள்ளான பாஜக இணை அமைச்சர் மேனகா காந்தி, இன்று அடுத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

News image
Updated On :15 ஏப்ரல் 2019, 9:01 am


முஸ்லிம் மக்கள் எனக்குத்தான் வாக்களிக்க வேண்டும். இல்லையென்றால் வேலை வாய்ப்பு வழங்கப்படாது என்று பேசி சர்ச்சைக்குள்ளான பாஜக இணை அமைச்சர் மேனகா காந்தி, இன்று அடுத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

வாக்களிக்கும் மக்களுக்கு ஏற்ப கிராமத்தை ஏ பி சி டி என வகைப்படுத்தியே நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்று மேனகா காந்தி கூறியிருப்பது தான் அடுத்த சர்ச்சையாகியுள்ளது.

அதாவது, ஒவ்வொரு கிராமத்திலும் எத்தனை சதவீத வாக்குகள் பதிவாகிறது என்பதைப் பொறுத்தே அந்த கிராமத்துக்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.

பாஜகவுக்கு எந்த கிராமத்தில் 80 சதவீத வாக்குகள் பதிவாகிறதோ அந்த கிராமம் ஏ பிரிவில் வைக்கப்பட்டு, அந்த கிராமத்துக்குத்தான் 80 சதவீத நலத்திட்டப் பணிகள் செய்யப்படும். எந்த நலத்திட்டமாக இருந்தாலும் முன்னுரிமை வழங்கப்படும். அதே சமயம் 60 சதவீதம் வாக்குகள் அளிக்கும் கிராமத்துக்கு பி பிரிவு வழங்கப்பட்டு, 60 சதவீதப் பணிகள் மேற்கொள்ளப்படும். இரண்டாவது இடத்தில் வைக்கப்பட்டு முன்னுரிமை அளிக்கப்படும்.

இதே நிலைதான் அடுத்தடுத்து 50 மற்றும் 30 சதவீத வாக்குகள் பதிவான கிராமங்கள் சி மற்றும் டி பிரிவில் வைக்கப்படுவதும், நலத்திட்டப் பணிகள் நடைபெறுவதும். 

ஏபிசிடி அடிப்படையில்தான் அனைத்து நலத்திட்டப் பணிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று மேனகா காந்தி கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.