ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மர்ம பெட்டி விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரிக்க காங்கிரஸ் கோரிக்கை

பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டரில் கொண்டுவரப்பட்ட மர்ம பெட்டி தொடர்பாக தேர்தல் ஆணையம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைத்தது.

News image
Updated On :14 ஏப்ரல் 2019, 3:53 pm

பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டரில் கொண்டுவரப்பட்ட மர்ம பெட்டி தொடர்பாக தேர்தல் ஆணையம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைத்தது.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி, செவ்வாய்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது அவரது ஹெலிகாப்டரில் இருந்து ஒரு பெட்டி கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த ஷர்மா கூறுகையில்,

ஹெலிகாப்டரில் இருந்து ஒரு பெட்டி மர்மமான முறையில் கொண்டு செல்லப்பட்டது. அது பாதுகாப்பு தொடர்பானதும் கிடையாது.எனவே தேர்தல் ஆணையம் அதுகுறித்து உரிய விசாரணை நடத்தி அந்த மர்ம பெட்டியில் உள்ளதை கண்டறிந்து வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம் என தெரிவித்தார்.

இதுதொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்துக்கு எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிரதமர் மோடி வந்த ஹெலிகாப்டரில் இருந்து ஒரு பெட்டி அவசரமாக கொண்டு செல்லப்பட்டு ஒரு காரில் வைப்பது போன்ற விடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.