கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

மர்ம பெட்டி விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரிக்க காங்கிரஸ் கோரிக்கை

பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டரில் கொண்டுவரப்பட்ட மர்ம பெட்டி தொடர்பாக தேர்தல் ஆணையம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைத்தது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:39 am

ANI

பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டரில் கொண்டுவரப்பட்ட மர்ம பெட்டி தொடர்பாக தேர்தல் ஆணையம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைத்தது.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி, செவ்வாய்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது அவரது ஹெலிகாப்டரில் இருந்து ஒரு பெட்டி கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த ஷர்மா கூறுகையில்,

ஹெலிகாப்டரில் இருந்து ஒரு பெட்டி மர்மமான முறையில் கொண்டு செல்லப்பட்டது. அது பாதுகாப்பு தொடர்பானதும் கிடையாது.எனவே தேர்தல் ஆணையம் அதுகுறித்து உரிய விசாரணை நடத்தி அந்த மர்ம பெட்டியில் உள்ளதை கண்டறிந்து வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம் என தெரிவித்தார்.

இதுதொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்துக்கு எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிரதமர் மோடி வந்த ஹெலிகாப்டரில் இருந்து ஒரு பெட்டி அவசரமாக கொண்டு செல்லப்பட்டு ஒரு காரில் வைப்பது போன்ற விடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.