கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

அறிவிக்கப்படாத எமர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது: லாலு பிரசாத் யாதவ்

நாட்டில் தற்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:37 am

ANI

நாட்டில் தற்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தனது சுயசரிதைப் புத்தகத்தில் தெரிவித்துள்ளதாவது:

இன்றைய சூழலில் மோடி அரசுக்கு எதிராக செய்தி வெளியிட அனைத்து ஊடகங்களும் தயங்குகின்றன. ஏனென்றால் நாட்டில் இப்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இது இந்திரா எமர்ஜென்சியை விட மிகவும் மோசமானது.

இந்திரா எமர்ஜென்சியின்போது அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், அவர்களை எதிர்த்த யாரையும் தேச விரோதிகளாக இந்திராவோ, காங்கிரஸ் கட்சியினரோ சித்தரித்தது கிடையாது. எந்த இடத்திலும் அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்படவில்லை. தலித்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. சாதி, மதத்தின் பெயரால் தலித்கள் கொல்லப்பட்டதும் கிடையாது. 

பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் சிறை வைக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் யாரும் கூட கொல்லப்பட்டதில்லை. ஆனால், தற்போது கேள்வி எழுப்பினால் பாகிஸ்தானுக்கு செல்லுமாறு கூறுகின்றனர். இதன்பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்த இந்திரா, வாக்காளர்களிடம் பொய் வாக்குறுதிகளை அளிக்கவில்லை. அந்த காலகட்டத்தில் மோடி, ஜேட்லி, வெங்கய்ய நாயுடு போன்ற பெயர்களே கேட்டது இல்லை என்றிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.