ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

அறிவிக்கப்படாத எமர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது: லாலு பிரசாத் யாதவ்

நாட்டில் தற்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :10 ஏப்ரல் 2019, 1:25 pm

நாட்டில் தற்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தனது சுயசரிதைப் புத்தகத்தில் தெரிவித்துள்ளதாவது:

இன்றைய சூழலில் மோடி அரசுக்கு எதிராக செய்தி வெளியிட அனைத்து ஊடகங்களும் தயங்குகின்றன. ஏனென்றால் நாட்டில் இப்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இது இந்திரா எமர்ஜென்சியை விட மிகவும் மோசமானது.

இந்திரா எமர்ஜென்சியின்போது அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், அவர்களை எதிர்த்த யாரையும் தேச விரோதிகளாக இந்திராவோ, காங்கிரஸ் கட்சியினரோ சித்தரித்தது கிடையாது. எந்த இடத்திலும் அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்படவில்லை. தலித்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. சாதி, மதத்தின் பெயரால் தலித்கள் கொல்லப்பட்டதும் கிடையாது. 

பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் சிறை வைக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் யாரும் கூட கொல்லப்பட்டதில்லை. ஆனால், தற்போது கேள்வி எழுப்பினால் பாகிஸ்தானுக்கு செல்லுமாறு கூறுகின்றனர். இதன்பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்த இந்திரா, வாக்காளர்களிடம் பொய் வாக்குறுதிகளை அளிக்கவில்லை. அந்த காலகட்டத்தில் மோடி, ஜேட்லி, வெங்கய்ய நாயுடு போன்ற பெயர்களே கேட்டது இல்லை என்றிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.