கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

அமேதி தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் ராகுல்

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் சோனியா, பிரியங்கா, ராபர்ட் வதேரா ஆகியோர் உடன் இருந்தனர்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:37 am

ANI

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் சோனியா, பிரியங்கா, ராபர்ட் வதேரா ஆகியோர் உடன் இருந்தனர்.

அமேதி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று காலை குடும்பத்தினருடன் வந்தார் ராகுல் காந்தி. பிறகு காங்கிரஸ் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்த ராகுல், மதியம் 1 மணியளவில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

17-ஆவது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதி மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு ஆகிய 2 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறார். 

இதில், வயநாடு தொகுதியில் கடந்த 4-ஆம் தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அமேதி தொகுதியில் போட்டியிடுவதற்காக அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

அவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு, முன்ஷிகன்ஜ்-தர்பிபூர் முதல் கௌரிகன்ஜ் வரை 3 கிலோ மீட்டருக்கு காங்கிரஸ் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்த பிறகு வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

அவர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது அவருடன் அவரது தாயார் சோனியா காந்தி மற்றும் சகோதரி பிரியங்கா காந்தி, ராபர்ட் வதேரா ஆகியோர் உடனிருந்தனர்.

ராகுல் காந்தி கடந்த 15 ஆண்டுகளாக அமேதி தொகுதியின் எம்பியாக இருந்து வருகிறார். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ஸ்மிருதி இரானியை தோற்கடித்து வெற்றி பெற்றார். 

இந்த முறையும் அமேதி தொகுதியில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி தான் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்கிறார் என்று தெரிகிறது. 

அமேதியில் ஆறாவது கட்டமாக மே 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.