ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

அத்வானி, ஜோஷியுடன் அமித் ஷா சந்திப்பு!

பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருடன் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். 

News image
Updated On :9 ஏப்ரல் 2019, 10:45 am

பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருடன் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். தில்லியில் உள்ள அவர்களது இல்லங்களில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. 

வருகிற மக்களவைத் தேர்தலில் இவ்விரு மூத்த தலைவர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக அத்வானியின் காந்திநகர் தொகுதியில் தற்போது அமித் ஷா களமிறங்கவுள்ளார். அதுபோன்று கடந்த தேர்தலில் மோடிக்காக வாராணசி தொகுதியை விட்டுக்கொடுத்தவர் முரளி மனோகர் ஜோஷி என்பவது அனைவரும் அறிந்தது.

Story image

இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான பாஜக வாக்குறுதி திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அப்போதும் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. மேலும், நாடு தான் முக்கியம், கட்சியும், சொந்த நலனும் அடுத்துதான் என சமீபத்தில் அத்வானி கருத்து தெரிவித்தபோது அதை பிரதமர் மோடி வரவேற்று பதிவிட்டிருந்தார். 

Story image

ஆனால், இது எதிர்கட்சிகளிடம் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே பாஜக தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.