ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கறுப்புப் பணமும், ரூ.15 லட்சமும் எங்கே? கபில் சிபல் கேள்வி

2014 தேர்தல் வாக்குறுதியை பாஜக நிறைவேற்றவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் குற்றம்சாட்டினார். 

News image
Updated On :9 ஏப்ரல் 2019, 9:30 am

2014 தேர்தல் வாக்குறுதியை பாஜக நிறைவேற்றவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் வெளியிட்ட எந்த வாக்குறுதியையும் பாஜக நிறைவேற்றவில்லை. குறிப்பாக வெளிநாட்டிலிருந்து கறுப்புப் பணம் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் என்றனர்.

ஆனால், இதுவரை அதை நிறைவேற்றவில்லை. மீட்கப்பட்ட அந்த கறுப்புப் பணத்தில் இருந்து ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்றார்கள். அதுவும் எங்கே என்று தெரியவில்லை.

370 நீக்கப்பட்டு பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்றார்கள். அதை அப்படியே இம்முறையும் பிரதிபலித்திருக்கிறார்கள். மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த அனைத்து வாய்ப்புகள் இருந்தும் அதை பயன்படுத்தாமல் தற்போது தேர்தல் வாக்குறுதியாக வெளியிட்டிருக்கிறார்கள்.

2025-ஆம் ஆண்டுக்குள் நமது பொருளாதாரம் 5 ட்ரில்லியனாக அதிகரிக்கும் என்று கூறியுள்ளனர். ஆனால், வெளிநாட்டில் பேசும் போது இந்தியாவின் பொருளாதாரம் 9 ட்ரில்லியனாக இருப்பதாக பிரதமர் மோடி தனது வழக்கமான பொய்யை கூறியுள்ளார். நாட்டின் நிறுவனங்களையும் பாஜக அழித்துவிட்டது என்று விமர்சித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.