சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

தில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்குபவர்களுக்கு ஆதரவு: கேஜரிவால் திடீர் முடிவு

தில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் கட்சிக்கு அடுத்து ஆட்சியமைக்க ஆம்ஆத்மி முழு ஆதரவு அளிக்கும் என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:36 am

ANI

தில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் கட்சிக்கு அடுத்து ஆட்சியமைக்க ஆம்ஆத்மி முழு ஆதரவு அளிக்கும் என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். இதுதொடர்பாக கிழக்கு தில்லியில் உள்ள ஷாஹத்ரா எனுமிடத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது அவர் கூறியதாவது:

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தில்லியின் கட்டமைப்பும், மக்களின் வளர்ச்சியும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனவே தில்லியில் ஆம்ஆத்மி மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே மக்களவைத் தேர்தலிலும் எங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். 

தில்லிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். தில்லியின் 7 தொகுதிகளிலும் ஆம்ஆத்மியை வெற்றிபெறச் செய்யுங்கள். மத்தியில் அடுத்து யார் ஆட்சியமைக்கப்போகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. இந்த 7 எம்.பி.க்களின் ஆதரவு அவர்களுக்கு தேவைப்படும் சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. 

எனவே அவர்கள் நம்மிடம் ஆதரவு கேட்டு வருவார்கள். அப்போது தில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க உறுதியளிப்பவர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

முன்னதாக, 2019 மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் உடன் ஆம்ஆத்மி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே இந்த தேர்தலில் தில்லியின் 7 தொகுதிகளிலும் ஆம்ஆத்மி தனித்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.