பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

தில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்குபவர்களுக்கு ஆதரவு: கேஜரிவால் திடீர் முடிவு

தில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் கட்சிக்கு அடுத்து ஆட்சியமைக்க ஆம்ஆத்மி முழு ஆதரவு அளிக்கும் என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். 

News image
Updated On :8 ஏப்ரல் 2019, 9:29 am

தில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் கட்சிக்கு அடுத்து ஆட்சியமைக்க ஆம்ஆத்மி முழு ஆதரவு அளிக்கும் என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். இதுதொடர்பாக கிழக்கு தில்லியில் உள்ள ஷாஹத்ரா எனுமிடத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது அவர் கூறியதாவது:

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தில்லியின் கட்டமைப்பும், மக்களின் வளர்ச்சியும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனவே தில்லியில் ஆம்ஆத்மி மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே மக்களவைத் தேர்தலிலும் எங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். 

தில்லிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். தில்லியின் 7 தொகுதிகளிலும் ஆம்ஆத்மியை வெற்றிபெறச் செய்யுங்கள். மத்தியில் அடுத்து யார் ஆட்சியமைக்கப்போகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. இந்த 7 எம்.பி.க்களின் ஆதரவு அவர்களுக்கு தேவைப்படும் சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. 

எனவே அவர்கள் நம்மிடம் ஆதரவு கேட்டு வருவார்கள். அப்போது தில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க உறுதியளிப்பவர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

முன்னதாக, 2019 மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் உடன் ஆம்ஆத்மி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே இந்த தேர்தலில் தில்லியின் 7 தொகுதிகளிலும் ஆம்ஆத்மி தனித்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.