ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மகாத்மா காந்தி அச்சப்பட்ட வாரிசு அரசியலை ராகுலும், பிரியங்காவும் முன்னெடுக்கின்றனர்: யோகி ஆதித்யநாத்

மகாத்மா காந்தி அச்சப்பட்ட குடும்ப வாரிசு அரசியலை ராகுலும், பிரியங்காவும் முன்னெடுக்கின்றனர் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டினார். 

News image
Updated On :8 ஏப்ரல் 2019, 12:42 pm

மகாத்மா காந்தி அச்சப்பட்ட குடும்ப வாரிசு அரசியலை ராகுலும், பிரியங்காவும் முன்னெடுக்கின்றனர் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1947-ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கலைக்கப்பட வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறினார். ஏனென்றால் அது பின்னாளில் நேருவின் குடும்ப சொத்தாக மாறி வாரிசு அரசியலை முன்னெடுக்கும் என்று அச்சப்பட்டார். இன்று அதை நிரூபிக்கும் வகையில் ராகுலும், பிரியங்காவும் வாரிசு அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.

வருகிற மக்களவைத் தேர்தலில் கடந்த முறை போன்று இம்முறையும் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும். அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெல்வது உறுதி. சொந்த தொகுதியான அமேதியில் தோல்வி பயம் காரணமாகத்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல், வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி பதிப்பின் எந்த இடத்திலும் காங்கிரஸ் கொடியோ அல்லது தேசிய கொடியோ இடம்பெறவில்லை. மாறாக பச்சை நிறத்தாலான நிலா மற்றும் நட்சத்திரம் இடம்பெற்ற கொடி தான் காணப்படுகிறது. ஏனென்றால் பாகிஸ்தானின் வாக்குறுதியை தான் காங்கிரஸ் பிரதிபலிக்கிறது என குற்றம்சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.