சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

ஒடிஸாவில் தாமரை மலர்ந்தே தீரும்: நரேந்திர மோடி

ஒடிஸாவில் நிச்சயம் தாமரை மலர்ந்தே தீரும் என பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தார். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:35 am

ANI

ஒடிஸாவில் நிச்சயம் தாமரை மலர்ந்தே தீரும் என பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அவ்வகையில், ஒடிஸாவின் சுந்தர்கர் பகுதியில் நடந்த பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

ஒடிஸாவின் வளர்ச்சியை மாநில அரசே தடுத்து விட்டது. அதற்கு முக்கிய காரணம் முதல்வர் நவீன் பட்நாயக் தான். பிஜு ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு பெண்களின் பாதுகாப்பில் அக்கறை கிடையாது. அதேபோன்று முன்பெல்லாம் நாடு முழுவதும் பயங்கரவாதம் பரவியிருந்தது. ஆனால், இப்போது பயங்கரவாதிகளின் இடத்துக்கே சென்று இந்தியா தாக்குதல் நடத்துகிறது.

விவசாயிகள் மற்றும் ஏழைகளின் பொருளாதார திட்டங்களை பிஜு ஜனதா தளக் கட்சி ஒடிஸாவில் தடுத்துவிட்டது. குறிப்பாக ஆயுஷ்மான் திட்டம் ஒடிஸாவில் நடைமுறைப்படுத்தவில்லை. எனவே வருகிற 2019 மக்களவைத் தேர்தல் ஒடிஸாவுக்கு மிக முக்கியமானது. ஊழல்வாதிகளை விடுத்து உழைப்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து ஒடிஸா மக்கள் வாக்களிக்க வேண்டும். 

உங்களுக்கு பிரிவினை வேண்டுமா அல்லது வளர்ச்சி வேண்டுமா? உங்களுக்கு வளர்ச்சி வேண்டுமென்றால் நீங்கள் இங்கு தாமரையை மலரச் செய்ய வேண்டும். எனவே இம்முறை ஒடிஸாவில் தாமரை மலர்ந்தே தீரும். நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நிச்சயம் தாமரை மலரும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.