சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

தேர்தல் நேரம் என்பதால் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் கோடிகள்!

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே அரசுப் பேருந்தில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.3.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:34 am

ANI

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே அரசுப் பேருந்தில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.3.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பேருந்து நடத்துநரிடம் ஒரு ரூபாய் பாக்கியை வாங்காமல் இறங்க முடியாத மனநிலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தமிழக மக்களால், கேட்பாரற்றுக் கிடந்த பையில் ரூ.3.48 கோடி இருந்தது என்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போனதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் வேட்டவலம் அரசுப் பேருந்து ஓட்டுநர் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், ஆந்திர மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான ஒரு அரசுப் பேருந்தில் இருந்த பையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கப் பணத்தை ஸ்ரீகாகுளம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தேர்தல் நேரம் என்பதால் கார் மற்றும் பிற வாகனங்களை விட பாதுகாப்பானது என்று கருதி, கோடிகள் அரசுப் பேருந்துகளில் பயணிக்கின்றன.

திருவண்ணாமலையிலிருந்து தருமபுரி நோக்கி புதன்கிழமை அரசுப் பேருந்து புறப்பட்டது. நாயக்கன்பட்டி கூட்டுச் சாலையில் சென்றபோது தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த உதவி செயற்பொறியாளர் சண்முகம் தலைமையிலான குழுவினர் பேருந்தில் சோதனையிட்டனர்.

அப்போது பேருந்தின் இருக்கை அடியில் 7 பைகளில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது. இந்தப் பணத்துக்கு யாரும் உரிமை கோரவில்லை. இதையடுத்து, ரூ.3 கோடியே 47 லட்சத்து 51ஆயிரத்து 110-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே பேருந்தில் இருந்த, திருவண்ணாமலை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையைச் சேர்ந்த நடத்துநர் செல்வராஜிடம் (54) அதிகாரிகள் விசாரித்தனர்.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணப்பையில் ரமேஷ் என்பவரின் வங்கிக் கணக்குப் புத்தகம் இருந்ததாம். விசாரணையில், ரமேஷ் வேட்டவலம் பகுதியைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் என்பது தெரிய வந்தது.  இதையடுத்து, ரமேஷிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.